அமைச்சர் நிகழ்ச்சியால் போக்குவரத்தில் மாற்றம் சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

பெற்றோர் ஆசிரியர் கழகம் 3-வது மண்டல மாநாடு தருமபுரி அரசு கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. இதில் சிறப்பக்காக பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான்கு மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Update: 2024-02-17 06:47 GMT
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் 3-வது மண்டல மாநாடு தருமபுரி அரசு கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. இதில் சிறப்பக்காக பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தர்மபுரி,சேலம் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு நடைபெறுகிறது. எனவே தர்மபுரி சேலம் கிருஷ்ணகிரி திருப்பத்தூரில் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் ஒரே நேரத்தில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பகுதிக்கு திரண்டு வந்ததால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருந்து ஒட்டப்பட்டி பகுதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நெடும் வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர். மேலும் பள்ளி வாகனங்கள் வருவதற்காக சாலையை ஒதுக்கி உள்ளனர் இருப்பினும் ஒரே நேரத்தில் நான்கு மாவட்ட பள்ளி வாகனங்கள் வந்ததால் நீண்ட நெடும் வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன.
Tags:    

Similar News