சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருத்தேர் வீதியுலா

நடராஜர் கோவிலில் வா வா நடராஜா என்ற கோஷம் முழங்க திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-12-27 05:55 GMT
நடராஜர் கோயில் தேர் திருவிழா 
உலக புகழ் பெற்ற கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வா வா நடராஜா வந்துவிடு நடராஜா என்ற கோஷத்துடன் தேர் இழுத்து வந்தனர்.
Tags:    

Similar News