முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

Update: 2023-12-05 10:12 GMT

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பள்ளிபாளையம் அதிமுக நகர, ஒன்றிய,பேரூர் கழகங்கள் சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி, பள்ளிபாளையம் ஆவரங்காடு எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது. நிகழ்வில் பள்ளிபாளையம் நகர செயலாளர் பி.எஸ்.வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.செந்தில், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் குமரேசன், நகர பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணி, ஆலாம்பாளையம் பேரூர் செயலாளர் செல்லதுரை, படைவீடு பேரூர் செயலாளர் ஜெகநாதன், நகர பொருளாளர் சிவகுமார், நகரக் கழகத் துணைச் செயலாளர் ஜெய் கணேஷ் மற்றும் திருமூர்த்தி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன், சுரேஷ், ராஜ்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் கிளை நிர்வாகிகள், மகளிர் அணி கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தபட்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.


 

Tags:    

Similar News