சின்னசேலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

சின்னசேலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Update: 2023-12-30 15:58 GMT

முகாமை தொடக்கி வைத்த எம்எல்ஏ

சின்னசேலத்தில், பேரூராட்சி பகுதி மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு, கலால் உதவி ஆணையர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார். முகாமை, சிறப்பு விருந்தினர் உதயசூரியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசினார்.

முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின்வாரியம், வங்கி, வேளாண் துறை, தோட்டக் கலை துறை உட்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற் றனர். 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, 21 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News