மின்வாரியம் சார்பில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

மின்வாரியம் சார்பில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-01-02 16:31 GMT

மின்வாரியம் சார்பில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் தென்காசி கோட்டத்தில் செங்கோட்டை கிராமபுற பிரிவு அலுவலகத் துக்கு உட்பட்ட புதூர் புலரி மெட்ரிக் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பகவினாயக சுந்தரம் தலைமை தாங்கினார். செங்கோட்டை உதவி செயற்பொறியாளர் அன்னராஜ், உதவி பொறியாளர் முப்புடாதி, ஆக்க முகவர் சோமசுந்தரம், வணிக ஆய்வாளர் மாயாண்டி, மதிப்பீட்டு ஆய்வாளர் ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்களை கணினியில் பதிவேற்றம் செய்து அவர்களின் மின்சாரம் சம்பந்தமான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மின்வாரிய அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என உறுதி அளித்தனர்.
Tags:    

Similar News