தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-25 14:46 GMT
ஆட்சியர் தீபக் ஜேக்கப்

அரசின் அனைத்து துறை சேவைகளும், ஒரே இடத்தில் கிடைத்திடும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி நாளை டிச.26 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, தஞ்சாவூர் ராஜப்பா நகர் ராஜ் பேலஸ் மண்டபத்திலும், கும்பகோணம் திருவிடைமருதூர் சாலை மகாராஜா மஹாலிலும், மணக்கரம்பை சமுதாயக்கூடம், இனாத்துக்கான்பட்டி ராவுசாப்பட்டி கிராம சேவை மையம், உளூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, அசூர் திருவள்ளுவர் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. 

இதில், பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு தங்கள் குறைகளை பதிவு செய்து தீர்வு காணலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News