மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; கலெக்டர் ஆய்வு

கக்கன் காலனியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, மாவட்டக் கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-22 10:51 GMT

"மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம், கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கக்கன் காலனி பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில், புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகர் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழி வகுக்கும் இந்த திட்டத்தில், அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை, விரைந்து செயல்படுத்திடவும், அரசு நிர்வாகத்தில் வெளிப்பட தன்மையை ஏற்படுத்திடும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில், எரிசக்தி துறை,மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, உள்ளிட்ட 10- துறைகளின் சார்பில், மனுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முகாமில், அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து ஒப்புதல் சீட்டு வழங்கினர். இந்த முகாமை, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, புகலூர் வட்டாட்சியர் முருகன் ஆகியோருடன் சென்று முகாமை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். ஆய்வின்போது, பொதுமக்கள் பல்வேறு துறைகளின் கீழ் வழங்கப்படும் மனுக்களை எவ்வாறு அணுக வேண்டும் என, அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Tags:    

Similar News