காட்டுப்புத்தூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

முசிறி அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் இன்று துவக்கி வைத்தார்.

Update: 2024-01-05 16:26 GMT

முகாமில் கலந்து கொண்டவர்கள் 

தமிழகத்தில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் .18 தேதி கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள காட்டுப்புத்தூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமினை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் வருவாய் துறை, மின்வாரியம், பொதுப்பணித்துறை மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து 700க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெற்றபட்டது.

முன்னதாக துறை சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசினர். முசிறி கோட்டாட்சியர் ராஜன் முகாமை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

Tags:    

Similar News