மக்களுடன் முதல்வர் திட்டம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைப்பு

சேலம் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2023-12-18 06:12 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
“மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை இன்று (திங்கட்கிழமை) கோவையில் தொடங்கி வைக்கிறார். சேலம் மாவட்டத்திலும் இந்த திட்ட தொடக்க விழா மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடக்கிறது. இதற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக இன்று மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 1-வது வார்டுக்குட்பட்ட காமநாயக்கன்பட்டி மாநகராட்சி பள்ளி, அஸ்தம்பட்டி மண்டலம் 14-வது வார்டு தொங்கும் பூங்கா, 6-வது வார்டு கோரிமேடு, அம்மாபேட்டை மண்டலம் 9-வது வார்டு வாய்கால்பட்டறை பகுதியிலும், கொண்டலாம்பட்டி மண்டலம் 45-வது வார்டு பொது நல பிரியர் சங்க கட்டிடத்தில் தொடங்கிறது. அதே போன்று ஆத்தூர், நகராட்சிக்கு, ராணிப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள அண்ணா கலையரங்கிலும், மேட்டூர் கேம்ப் செயின்ட் பிலோமினா நடுநிலை பள்ளியிலும் நடக்கிறது. ஓமலூர், சங்ககிரி பேரூராட்சியிலும், கிராம ஊராட்சி பகுதியான அதிகாரப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகிலும் என மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் இன்று நடக்கிறது.
Tags:    

Similar News