மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - மேயர் துவக்கி வைப்பு

சேலம் மாநகராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

Update: 2023-12-28 04:28 GMT

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் சேலம் மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று மாநகராட்சி 29-வது வார்டுக்குட்பட்ட கோகுலநாதா இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் கிரிஜா குமரேசன் வரவேற்றுப்பேசினார். முகாமில் வார்டு மக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை அடங்கிய மனுக்களை வழங்கினர். இதில் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, உதவி ஆணையாளர் சிந்துஜா, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உளபட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று 22, 36, 56-வது வார்டு பகுதிகளில் முகாம் நடை பெற்றது.
Tags:    

Similar News