மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - எம் எல் ஏ துவக்கி வைப்பு

கருப்பூர் பேரூராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-12-25 05:43 GMT

மக்களுடன் முதல்வர் திட்ட  முகாம் 

சேலம் மாவட்டம் கருப்பூர், பேரூராட்சி சந்தைப்பேட்டை சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமை தாங்கினார். ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் சண்முகம், கருப்பூர் பேரூராட்சி தலைவர் சுலக்சனா சிலம்பரசன், துணைத்தலைவர் சாந்தி முருகேசன், செயல் அலுவலர் நீலாதேவி ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகர தி.மு.க. செயலாளர் லோகநாதன் வரவேற்றார்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கருப்பூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 430 மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் ஓமலூர் தாசில்தார் புருஷோத்தமன், வருவாய் அலுவலர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கோமதி, பெரியசாமி, முருகன், நிர்மலா, ரம்யா, சுபா, கோமதி, மோகனன், திவ்யா அனைத்து துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News