மக்களுடன் முதல்வர் முகாம்-மனு அளிக்க குவிந்த மக்கள்

மக்களுடன் முதல்வர் முகாமில் மனு அளிக்க மக்கள் குவிந்தனர்.

Update: 2023-12-22 16:18 GMT

கோவை அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றடையும் வகையில் மக்கள் தான் முதல்வர் எனும் திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் துவங்கி வைத்தார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகளில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி வார்டு எண் 63 மற்றும் 65ற்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று முகாம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

இந்த முகாமில் பத்துக்கும் மேற்பட்ட அரசு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து விண்ண்பங்களை பெற்று கணணி மூலம் பதிவேற்றம் செய்தனர்.மக்களுடன் முதல்வர் முகாம் மூலம் அளிக்கபடும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடதக்கது.

முகாம் நடைபெற்ற மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தேவையான வசதிகளை 63 வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி முருகன் மற்றும் 65வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி மேகநாதன் ஆகியேர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News