மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் - தொடங்கி வைத்த எம்எல்ஏ

தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

Update: 2023-12-23 05:12 GMT
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன், திமுக ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், பேரூராட்சி தலைவர் சௌந்தரராஜன், நிர்வாகி பிரபு உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயலாளர் சதீஷ்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் புதியமின் இணைப்பு, மின் கட்டண மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்து வரி, குடிநீர், பிறப்பு, இறப்பு சான்றிதழ், காலிமனை வரிவிதிப்பு, பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, இணையவழி பட்டா, நில அளவீடு, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மற்றும் இதர சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தல் மற்றும் காவல்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் உதவிகள் சார்ந்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வழங்கினர் முகாமில் பேரூராட்சி துணைத்தலைவர் செல்வி கோவிந்தசாமி, நகர செயலாளர் தர்மராஜ், பேரூராட்சி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
Tags:    

Similar News