திருவாரூரில் நாளை மக்களுடன் முதல்வர் திட்டம்

Update: 2023-12-17 03:46 GMT

மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் வரும் 18ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து துறைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு மக்களுடன் முதல்வர் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும். பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News