நெல்மணியில் "அ" எழுதி பள்ளியில் சேர்ந்த குழந்தைகள்.

விஜயதசமி நாளில், நர்சரி பள்ளியில், நெல்மணியில் "அ" எழுதி குழந்தைகள் சேர்த்தனர்.

Update: 2023-10-24 11:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தளவாய் பாளையத்தில் செயல்படும் நேஷனல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் விஜயதசமி நாளை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். இதற்காக சிறப்பு அட்மிஷன் நிகழ்ச்சியையும் பள்ளியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. தளவாய் பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேஷனல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் சேர்த்தனர்.

அவர்களுக்கு பள்ளியின் முதல்வர் லாரன்ஸ் யாஸ்மின் சர்தார் தமிழ் முதல் எழுத்தான "அ" என்ற எழுத்தை சேகரித்து வைக்கப்பட்ட நெல்மணியில் குழந்தைகளின் கைபிடித்து எழுதி பழக்கினர்.

பின்னர் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கான அனுமதி கடிதத்தையும் பெற்றோர்களுக்கு வழங்கியதோடு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியைகள் ராஜேஸ்வரி, ராதாமணி, பிரேமா, பாத்திமா உள்ளிட்ட ஆசிரியைகள் கலந்து கொண்டு, குழந்தைகள் பள்ளியில் சேரும் விஜயதசமி நாளை சிறப்பாக கொண்டாடினர்.

Tags:    

Similar News