இடிந்து விழும் அபாயத்தில் குழந்தைகள் மையம்

விஸ்வநாதப்பேரியில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள குழந்தைகள் மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-04 07:43 GMT

சேதமடைந்த குழந்தைகள் மைய கட்டிடம் 

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் குழந்தைகள் மைய கட்டடம் அபாய நிலையில் உள்ளதால் பெற்றோா்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த குழந்தைகள் மையம் 1990 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 10 ஆண் குழந்தைகளும், 5 பெண் குழந்தைகளும் பயன்பெற்று வருகின்றனா். இந்த கட்டடத்தில் 2015ஆம் ஆண்டு ரூ.42 ஆயிரம் செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்த குழந்தைகள் மைய கட்டடத்தின் மேற்கூரைகள் பெயா்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள பெற்றோா்கள், கட்டடத்தை உடனடியாக சீா் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
Tags:    

Similar News