ராசிபுரம்: இன்னர்வீல் சங்கம் சார்பில் குழந்தைகள் தினவிழா

Update: 2023-11-15 08:20 GMT
குழந்தைகள் தினவிழா 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராசிபுரம் இன்னர்வீல் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு மாணவ மாணவியர்களிடையே போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களுக்கு தேசத் தலைவர்கள் குறித்து கட்டுரைப்போட்டி, ஒவியப் போட்டி, பல்வேறு பொருட்களை கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போட்டி போன்றவை நடத்தப்பட்டன. இதில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு பரிசளிப்பு விழாவில் இன்னர் வீல் சங்கத் தலைவர் சரோஜா குமார் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் தெய்வானை ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார்.  சங்க செயலர் சதாமனோகர், நிர்வாகிகள் அமலா, ஸ்ரீதேவிராஜேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News