வாசுதேவநல்லூர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா

வாசுதேவநல்லூர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது

Update: 2024-04-25 11:13 GMT
வாசுதேவநல்லூர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர், அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணிநாதர் திருக்கோவில் அர்த்தநாரீஸ் வரர் கோவிலில் பத்தாவது ஆண்டு சித்ரா பெளர்ணமி விழா நடைபெற்றது.

அர்த்தநாரீஸ்வரர் கைங்கர்ய திருத்தொண்டர்கள் சமூகநல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் சௌந்திரபாண்டியன் மாரியப்பன் ஆகியோர் கோவில் முன்பு சித்திரகுப்த நாயனார் திரு ஏடு வாசித்தனர். நேற்று மாலை அருள்மிகு மந்தை விநாயகர் திருக்கோவி லில் இருந்து ஸ்ரீ அர்த்தநாரீஸ் வரர் சிவபூத கணநாத கைலாயத் திருக்கூட்ட கைலாய சிவ வாத்தியத்துடன் எழுந்தருளல் நடைபெற்றது.

இரவு அருள்மிகு சிந்தாமணிநாதசுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி ஷேத்ரவலம் , பன்னிரு திருமுறை கோவில் அருள்மிகு சிவிகை நாயனார் ஷேத்ரவலம் எழுந்தருளல் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அர்த்தநாரீஸ்வரர் கைங்கர்ய திருத்தொண்டர்கள் சமூகநல அறக்கட்டளை, சிவ பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News