திருமருகல் ரத்தினகிரீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா

நாதை மாவட்டம் திருமருகல் ரத்தினகிரீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-04-18 05:56 GMT

நாதை மாவட்டம் திருமருகல் ரத்தினகிரீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


நாதை மாவட்டம் திருமருகல் ரத்தினகிரீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா நாகை மாவட்டம் திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி சந்திரபிரபை பஞ்சமூர்த்தி வீதியுலாவும் அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் அசோக்ராஜா,தக்கார் தனலெட்சுமி, கணக்கர் சீனிவாசன், ஆலய திருப்பணி குழுவினர்,திருமருகல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதில் திருமருகல் ராம்ராஜ் வழங்கிய ஜெய் ஸ்ரீ வர்ணாலயா இசை நாட்டிய பயிற்சி பள்ளியின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News