கிறிஸ்துமஸ் : சத்துவாச்சாரி அருகே 10 அடி குடில்

இயேசு கிறிஸ்து பிறந்த நாளையொட்டி சத்துவாச்சாரி அருகே உள்ள ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 அடி கொண்ட குடிலை பொதுமக்கள் கண்டு களித்து ஜெபித்து சென்றனர்.

Update: 2023-12-25 04:55 GMT

குடில் 

வேலூர் மாவட்டம் , சத்துவாச்சாரி இரங்காபுரத்தில் உள்ள இசிஐ, கிறிஸ்து நாதர் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 அடி கொண்ட குடிலை மஞ்சு புல் வைத்து கிறிஸ்து தேவாலயம் போல் தத்ரூபமாக அமைத்துள்ளனர் இந்த குடிலானது கிறிஸ்து பிறப்பு, நாள் வரவேற்கும் வகையில் ஆலயத்தில் குடில் அமைத்து. அப்பகுதி 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சக்கரவர்த்தி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் சத்துவாச்சாரி இரங்காபுரம் ECI, கிறிஸ்து நாதர் திருச்சபை போதகர் REV. C. ராபர்ட் கிங்ஸ்லி மற்றும் சபை மூப்பர் இஸ்ரவேல் காசாளர் சுரேஷ் டேவிட் சபை வாலிபர்கள் சாமுவேல் இசை ஜேம்ஸ் இமான் மற்றும் சபை விசுவாசிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் குடில் காண ஏராளமானோர் ஆலயத்திற்கு வந்து குடிலைப் பார்த்து கிறிஸ்து இயேசு பெருமானை ஜெபித்து செல்கின்றனர்.

Tags:    

Similar News