மேலூரில் கிறிஸ்மஸ் கேக் தயாரிப்பு - துவக்கி வைத்த நடிகர் வையாபுரி

மேலூரில் கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி 2500 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் தயாரிப்பு

Update: 2023-12-05 03:11 GMT

பிரமாண்ட கேக் தயாரிப்பு பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மேலூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி 2500 கிலோ கொண்ட பிரமாண்ட கேக் தயாரிப்பு பணியை  நடிகர் வையாபுரி தொடங்கி வைத்தார்.  மதுரை மாவட்டம் மேலூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, 500 கிலோ உலர் பழங்கள் மற்றும் மதுபானங்கள் கொண்டு 2500 கிலோ கொண்ட பிரமாண்ட கேக் தயாரிப்பு பணி டெம்பிள் சிட்டி தனியார் உணவகம் சார்பில் தயாரிக்கப்படும் நிலையில் திரைப்பட நடிகர் வையாபுரி உள்ளிட்டோர் கேக் தயாரிப்பு பணியை தொடங்கி வைத்தனர். சுமார் 20 நாட்களுக்கு மேலாக பதப்படுத்தப்பட உள்ள இந்த உலர் பழங்கள் கொண்டு, 2500 கிலோ கொண்ட கேக் தயாரிப்பு பணியில் 20க்கும்மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். உணவக உரிமையாளரான டெம்பிள் சிட்டி குமார், நடிகர் சுரேஷ், தமிழ்நாடு துணை நடிகர்கள் சங்கத் துணைத் தலைவர் ஜெகன், ஹோட்டல் நிர்வாகி எல். கே. அபிகாஷ் ஆகியோர் இந்த கேக் தயாரிப்பு பணியை தொடங்கி வைத்தனர்
Tags:    

Similar News