பாவூா்சத்திரத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி

Update: 2023-12-19 03:13 GMT

கிறிஸ்துமஸ் கீத பவனி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூா்சத்திரம் கேடிசி நகா் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயம் சாா்பில் நகரின் முக்கிய பகுதிகளில் கிறிஸ்மஸ் கீத பவனி நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு, தேவாலயங்களிலிருந்து சபை மக்களின் இல்லங்களுக்கு சென்று சந்தித்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் கூறுவது வழக்கம். அதன்படி, பாவூா்சத்திரம் தென்காசி - நெல்லை சாலையின் அருகே உள்ள கேடிசி நகா் ஆலயத்திலிருந்து குருவானவா் வாட்சன் வரதராஜ், சபை ஊழியா் ரூபன், தங்கராஜா மற்றும் பாடகா் குழுவினா் கிறிஸ்மஸ் தாத்தாவுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கீத பவனி சென்று கிறிஸ்து பிறப்பின் பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனா்.
Tags:    

Similar News