மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மையத்தில் கிறிஸ்துமஸ் விழா

விழுப்புரம் மாவட்டம் காணை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மையத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது

Update: 2023-12-23 12:31 GMT

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மையத்தில் கிறிஸ்துமஸ் விழா

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் சார்பில் காணை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒன்றிய பயிற்சி மையத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, விழாவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், ஆசிரிய பயிற்றுனர் கள் கெஜலட்சுமி, எழிலரசி, அனிதா, இவாஞ்சலின், கவிதா, லட் சுமி, ஒன்றிய பொறியாளர் மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேக் வழங்கினர். இதில் சிறப்பு பயிற்றுனர்கள் லியோனி, விஜயலட்சுமி, சரண்யா, ஏசுமரி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் இயன்முறை மருத்துவர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News