கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

குடவாசல் தாலுக்கா பெரும்பண்ணையூரில் 150 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-25 11:22 GMT

குடவாசல் தாலுக்கா பெரும்பண்ணையூரில் 150 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா பெரும்பண்ணையூர் கிராமத்தில் ரோம் நகரில் உள்ள தேவாலயம் போன்ற பிரம்மாண்டமான 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தேவாலயம் உள்ளது . இங்கு வண்ணமயமாக மின் அலங்காரங்கள் செய்யப்பட்டு கிறிஸ்துமஸ் பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து குழந்தை இயேசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .இதனை அடுத்து உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News