சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு நகரம் முழுதும் தெருமுனை பிரச்சார கூட்டம்

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு நகரம் முழுதும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.

Update: 2024-01-08 11:44 GMT

தெருமுனை பிரச்சார கூட்டம்

நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதம் போனஸ் கேட்டு நகரம் முழுதும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் போனஸ் வழங்க அரசு சார்பில் அரசானை இட்டு உத்திரவாதம் செய்கிறது. ஆனால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு இதுவரை போனஸ் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 20 சதவீதம் போனஸ் கேட்பது என முடிவு செய்து, நேற்று நகரம் முழுதும் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. பொங்கலுக்கு 15 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் அசோகன், மாவட்டதலைவர் மோகன், நகர செயலர் பாலுசாமி, நகர பொருளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். ஓலப்பாளையம், சடையம்பாளையம், சத்யாபுரி, காந்திபுரம், சந்தை பேட்டை, கே.ஊ.என். தியேட்டர் பஸ் ஸ்டாப், நாராயண நகர், சுந்தரம் நகர், ஆனங்கூர் பிரிவு ஆகிய இடங்களில் இந்த தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.
Tags:    

Similar News