பழனியில் கட்டட‌ப் பொறியாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நகர கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பேருந்துநிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-23 08:14 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனி நகர கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பேருந்துநிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பழனியில் கட்டிட‌ப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனி நகர கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், இதனால் கட்டுமான தொழில் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்‌ தெரிவித்தனர்.

Tags:    

Similar News