தானே களத்தில் இறங்கிய பொதுமக்கள்
Update: 2023-12-19 09:36 GMT
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று காலை டவுனில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலை நடுவே ஆலமரம் ஒன்று சாய்ந்து கிடந்தது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்திற்கு உதவி செய்தனர். பின்னர் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் முழுமையாக சீர் செய்யப்பட்டது.