நகராட்சி அதிகாரிகள் -பிரியாணி கடை ஊழியர்கள் மோதல் : இருவர் கைது

மயிலாடுதுறை கச்சேரி சாலை பிரியாணி கடையில் சோதனைக்கு சென்ற அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து துன்புறுத்திய வழக்கில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் கைது செய்க்கோரி நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-06-02 07:09 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள தனியார் பிரியாணி கடையில் ஆய்வுக்கு சென்ற நகர சுகாதார ஆய்வாளர் பிருந்தா, நகர அமைப்பு உதவியாளர் முருகராஜ் ஆகியோரை தாக்கிய 3-வது குற்றவாளி செபாஸ்டின் (25) என்பவரை மயிலாடுதுறை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில் முதல் குற்றவாளியான கடை நிர்வாகி அஃபில் (37) என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமர் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மூன்றாவது நாளாக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News