சிவகாசி அருகே கோஷ்டி மோதல் - 7 பேர் கைது, 2 பேர் தலைமறைவு

திருத்தங்கலில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர்.

Update: 2024-04-02 04:58 GMT

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், இவருக்கும் சூரியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது .சூர்யாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக வெங்கடேஸ்வரன் தனது நண்பர்கள் செல்வகுமார், பொன்னிரளப்பன் ஆகியோருடன் திருத்தங்கல் சத்யாநகர் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த வேல்முருகன்,தினகரன்,சூர்யா, ஜெகதீசன்,அந்தோணி, முரளிதரன் ஆகியோர் வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்து அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த செல்வகுமார், பொன்னீரளப்பன், வெங்கடேஸ்வரன் ஆகியோர் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

.இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே சம்பவம் தொடர்பாக சூர்யா கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேஸ்வரன், செல்வக்குமார், பொன்னிரளப்பன் ஆகிய 3 பேர் மீது கொலை மிரட்டல் புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News