ஓமலூர் அருகே பெட்ரோல் அடிப்பதில் மோதல் - 5 பேர் கைது

Update: 2023-11-15 04:17 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா கஞ்சநாய்கன்பட்டியை சேர்ந்த லோகநாதன், பாலாஜி ஆகியோர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடித்து கொண்டிருந்தனர். அப்போது செம்மாண்டப்பட்டி ஏனாதி காலனியை சேர்ந்த 2வாலிபர்களுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு மோதலில் 6 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரித்ததில் அதே பகுதியில் வசிக்கும் தங்கராஜ், கோபி சர்மா, மோகன்ராஜ்,ரவி ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீது வழக்குப் பதிவு அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News