பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா, எம்எல்ஏ பங்கேற்பு

பெருங்குடி சென்னை தொடக்கப்பள்ளியில் சட்ட மன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டன.

Update: 2024-02-16 09:09 GMT
பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா, எம்எல்ஏ பங்கேற்பு

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14-ல் உள்ளடக்கிய வார்டு எண் 184 பெருங்குடி சென்னை தொடக்கப்பள்ளியில் சட்ட மன்ற உறுப்பினர் 2022-2023 ஆம் ஆண்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 40,00,000/- மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்க்கு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் திறந்து வைத்து, மேலும் அதே வளாகத்தில் சிங்கார சென்னை 2.O நிதியிலிருந்து ரூபாய் 1.09 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் இரண்டு தளத்திற்கு இரண்டு வகுப்பறைகள் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சென்னை மாநகராட்சி 14 வது மண்டல குழு தலைவர் S.V ரவிச்சந்திரன்,வட்ட செயலாளர்கள் டேவிட் சௌந்தர்ராஜன், தேவராஜ், ம‌ற்று‌ம் ராஜேஷ் குமார்,ஸ்ரீகாந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News