மல்லசமுத்திரத்தில் ரூ 1.50 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

மல்லசமுத்திரத்தில் ரூ 1.50 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டன.

Update: 2023-12-15 15:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.1.50லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதுகுறித்து, மேலாளர் கணேசன் தெரிவித்ததாவது; திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் 50மூட்டைகள் வரத்து வந்தது. இதில், முதல் தரம் ரூ.71.15முதல் ரூ.78.95வரையிலும், இரண்டாம் தரம் ரூ.55.75 முதல் ரூ.65.25வரையிலும் என மொத்தம் ரூ.1.50லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம், வருகிற 22ல்நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
Tags:    

Similar News