பரமத்தி வேலூரில் தேங்காய் 22 ஆயிரத்திற்கு ஏலம் போனது

பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் 22 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

Update: 2024-04-02 09:07 GMT

தேங்காய்

பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ரூ 22 ஆயிரத்து 842-க்கு ஏலம் போனது.  பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 1,225 கிலோ தேங்காய்களை ‌ விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ26.89 -க்கும்,  குறைந்த பட்சமாக ரூ.25.19 -க்கும், சராசரியாக ரூ.25.89-க்கும்  ஏலம் போனது.மொத்தம் ரூ.31 ஆயிரத்து 850-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு 670-கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.28.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ22.30- க்கும், சராசரியாக ரூ.‌26.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 22 ஆயிரத்து 842- க்கு வர்த்தகம் நடைபெற்றது.
Tags:    

Similar News