அரசு பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுடன் ஆட்சியர் ஜெயசீலன் காணொளி காட்சி மூலமாக கலந்துரையாடினார்.

Update: 2024-02-11 04:25 GMT
ஆட்சியர் ஜெயசீலன் 
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட முழுவதும் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியுடன் பொது தேர்வு மற்றும் உயர்கல்வி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொது தேர்வு குறித்தும் உயர்கல்வி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கூடிய சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
Tags:    

Similar News