ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை ஆட்சியர் ஆய்வு !

ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை ஆட்சியர் தங்கவேல் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-29 09:12 GMT

ஆட்சியர் தங்கவேல் 

ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் தங்கவேல். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வேட்பாளர்கள் செய்யும் தேர்தல் செலவு குறித்து அறிந்து கொள்வதற்காகவும், தங்களது பிரச்சாரத்தை விளம்பரம் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கையை கண்காணிப்பதற்காகவும், அதற்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களை அடையாளம் காண்பதற்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் "ஊடக சான்றிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் "செயல்பட்டு வருகிறது. இன்று இந்த மையத்தை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான தங்கவேல் நேரில் சென்று, அந்த மையத்தில் நடைபெறும் செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை செயல்படுத்தும் அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரித்து ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News