வாக்கு எண்ணிக்கை மையம் நேரில் ஆய்வு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடக்கும் தேர்தல் பணிகளை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி ஆய்வு செய்தாா்.

Update: 2024-04-18 06:57 GMT

பைல் படம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணி, திண்டுக்கல் பழனி சாலையிலுள்ள அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, பாதுகாப்பாக வைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தரைத்தளத்தில், திண்டுக்கல், பழனி தொகுதிகள், முதல் தளத்தில் நத்தம், ஆத்தூா் தொகுதிகள், இரண்டாம் தளத்தில் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. திண்டுக்கல் தொகுதியில் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.

Tags:    

Similar News