வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியர் ஆய்வு

மாற்றுத்திறனாளிகள் மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2024-03-29 10:26 GMT
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அரியாத்தூர் கிராமத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News