எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் கல்வி பயலும் எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-05-21 12:33 GMT

மாவட்ட ஆட்சியர் 

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில், 2024-2025ம் ஆண்டிற்கான முதுநிலை பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை, வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 31ம்தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு ஒன்றிய அமைச்சகத்தின் இணையதளத்தை பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News