இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை ஆட்சியர் ஆய்வு

இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-19 01:10 GMT

இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை ஆட்சியர் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.06.2024) தலைமைச் செயலகத்திலிருந்து வந்தவாசி வட்டம், கீழ்நமண்டி கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை காணொளிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் . இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . அப்போது ஆரணி நாடாமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேத்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News