மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நடக்கும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து மாவட்டக் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-22 15:28 GMT

 அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நடக்கும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து மாவட்டக் கலெக்டர் ஆய்வு செய்தார். 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பழத்தோட்டம் 1-வது தெருவில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் ரூபாய் 2 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் அருண்குமார், அச்சரப்பாக்கம் பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன், துணைத்தலைவர் எழிலரசன் இளநிலை பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் சரவணன், மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்..
Tags:    

Similar News