தாட்கோ மூலம் கடனுதவி - ஆட்சியர் அறிவிப்பு

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த தொழில் முனைவோர் தாட்கோ மூலம் கடனுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Update: 2023-12-24 13:01 GMT

தாட்கோ மூலம் கடனுதவி 

தாட்கோ மூலம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களின் வாழ்வதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரைய தொகையினை குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடனாக பெற்று வாங்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. எனவே தகுதியான பயனாளிகள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News