கல்லூரி பேருந்து மோதி விபத்து

பெரியவாணிக்கரை அருகே டூவீலர் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

Update: 2024-06-28 16:28 GMT

கோப்பு படம்

. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, புஞ்சை காளக்குறிச்சி அருகே உள்ள பெரிய வாணிக்கரை காலனி பகுதியை சேர்ந்தவர் குப்பன் மகன் ஆனந்தன் வயது 45. இவர் ஜூன் 27ஆம் தேதி காலை 9 மணி அளவில், பெரியவாணி கரையிலிருந்து நஞ்சை காளக்குறிச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் பெரிய வாணிக்கரை பகுதியில் உள்ள சிதம்பரம் என்பவரது தோட்டத்து வடக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிர் திசையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சர்க்கரை வலசு பகுதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் காந்திராஜ் வயது 28 என்பவர் ஓட்டி வந்த, கரூரில் செயல்படும் தனியார் கல்லூரி பேருந்து, ஆனந்தன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வலது காலில் பலத்த காயமடைந்த ஆனந்தனை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தன் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கல்லூரி பேருந்தை கவன குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காந்திராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.
Tags:    

Similar News