திருப்பூர் சாலையின் நடுவே சிக்கிய கல்லூரி பேருந்து !
திருப்பூர் அவிநாசி ரோடு, குமார் நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் கல்லூரி பேருந்தின் சக்கரம் சிக்கியது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 09:20 GMT
கல்லூரி பேருந்து
திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நான்காம் குடிநீர் திட்ட பணிகளுக்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் அவிநாசி ரோடு குமார் நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை சரிவர செப்பனிடாததால் தனியார் நர்சிங் கல்லூரி பேருந்தின் சக்கரம் சாலையின் நடுவே சிக்கியது. மேலும் பேருந்தில் பயணித்த மாணவ, மாணவியர்களுக்கு எந்தவித காயமும் இன்றி தப்பித்தனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர பொதுமக்கள் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்படும் சாலைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.