தர்மபுரியில் ஆட்சியர் தலைமையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி

விஜய்வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலை அரங்கில் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டல், கல்லூரிக்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-09 16:35 GMT

கல்லூரி கனவு 

தருமபுரி விஜய்வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலை அரங்கில் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டல், கல்லூரிக்கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (09.05.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதின் இப்ராகிம், கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர்.சிந்தியா செல்வி, வருவாய் கோட்டாட்சியர். இரா. காயத்ரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,.ஐ.ஜோதி சந்திரா, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News