திருமயம் அருகே கல்லுாரி மாணவி தற்கொலை

திருமயம் அருகே கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-29 08:55 GMT

கோப்பு படம் 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் சுபாஷினி (எ) சுபஸ்ரீ (20). திரும யம் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுதி அறையில் மின் விசிறியில் தூக்குமாட்டி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார்.

நமணசமுத் திரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மாணவியின் தாய்மாமா வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

அன்று முதல் சுபஸ்ரீ மனமுடைந்த நிலையில் இருந்து வந்தது தெரிய வந்தது. இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News