கல்லூரி மாணவி தற்கொலை

அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவியான சவுமினா, திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

Update: 2024-01-06 02:08 GMT

பைல் படம்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே அமானி கொண்டலாம்பட்டி பகுதி கிழக்கு வட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகள் சவுமினா (வயது 18). இவர் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டில் உள்ள மின்விசிறியில் சவுமினா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சவுமினா உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சவுமினா தற்கொலை தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News