முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

Update: 2023-12-06 01:20 GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி இன்று தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. . தமிழ்ச்செல்வன் தலைமையிலும் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர். அருணாச்சலம் முன்னிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், அங்குள்ள எம்ஜிஆர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர், இதனையடுத்து அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா, சந்திரகாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன் , ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News