எடப்பாடியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
எடப்பாடியில் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
By : King 24x7 Website
Update: 2023-12-05 05:58 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் நகர கழக செயலாளர் முருகன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் நாடு முழுவதும் உள்ள அதிமுகவினர் இடையே அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அம்மா உணவகம் எதிரே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு எடப்பாடி நகர அதிமுக சார்பில் நகர கழக செயலாளர் AM.முருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் கதிரேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.