மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் பணி தொடக்கம்

மாஞ்சோலையில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த தோட்ட தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் பணி துவங்கியுள்ளது.

Update: 2024-06-13 04:53 GMT

மாஞ்சோலையில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த தோட்ட தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் பணி துவங்கியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் காசோலை வழங்கும் பணி இன்று (ஜூன் 13) முதல் தொடங்கப்பட உள்ளது. விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்றும் நாளையும் முதல் கட்டமாக காசோலை வழங்கப்பட உள்ளது. இதில் 530 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
Tags:    

Similar News