வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம் - எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு வளர்ச்சி திட்ட பணிகளை எம்பி, எம்எல்ஏ தொடக்கி வைத்தனர்.

Update: 2024-03-13 17:53 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் கள்ளபிரான்புரம் ஊராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா மற்றும் தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் திறப்பு விழா மற்றும் 13 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை போடும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், ஒன்றிய கழக செயலாளர் பட்டாளம் சத்யசாய் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் செம்பருத்தி, ஒன்றிய கவுன்சிலர் ஒப்பிலால் சத்யசாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News